எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்தவர் மரணம்

ஹொரணையில் எரிபொருளுக்கான வரிசையில் காத்திருந்தவர் மரணம்

by Bella Dalima 23-06-2022 | 4:11 PM
Colombo (News 1st) ஹொரணை - கல்பாத்த, படகொட CEYPETCO எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். தனியார் நிறுவனமொன்றுக்கு சொந்தமான, இறப்பர் பால் கொண்டு செல்லும் பௌசர் ஒன்றில் இருந்த ஒருவர், இன்று அதிகாலை அந்த வாகனத்திற்குள்ளேயே உயிரிழந்துள்ளார். சங்கரத்ன மாவத்தை, மத்திய அஹங்கமவை சேர்ந்த 63 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார். வரிசைகளில் பதிவான உயிரிழப்புகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட்  அறிக்கையிடும் 11 ஆவது மரணமே இது.