வத்தளையை சேர்ந்தவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு

வத்தளையை சேர்ந்தவர் முல்லைத்தீவில் சடலமாக மீட்பு

by Bella Dalima 23-06-2022 | 5:24 PM
Colombo (News 1st) வத்தளை - எலகந்த பகுதியை சேர்ந்த ஒருவர் முல்லைத்தீவு - பாலிநகரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பாலிநகரில் உள்ள விடுதியொன்றின் அறையிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த அறையில் அவர் வசித்து வந்த நிலையில், இன்று முற்பகல் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். நீதவான் விசாரணைகளின் பின்னர், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை முல்லைத்தீவு பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மல்லாவி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.