இந்திய பிரதிநிதிகள் நால்வர் இலங்கை வருகை; பிரதமருடன் பேச்சுவார்த்தை 

இந்திய பிரதிநிதிகள் நால்வர் இலங்கை வருகை; பிரதமருடன் பேச்சுவார்த்தை 

எழுத்தாளர் Bella Dalima

23 Jun, 2022 | 5:32 pm

Colombo (News 1st) நாட்டிற்கு வருகை தந்துள்ள இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய பிரதிநிதிகள் நால்வர் இன்று (23) காலை நாட்டிற்கு வருகை தந்தனர்.

இலங்கைக்கு மேலும் கடனுதவி வழங்குவது தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இவர்கள் நாட்டிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்திய வௌிவிவகார அமைச்சின் செயலாளர் வினய் க்வாத்ரா உள்ளிட்ட நால்வர் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.

இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் இவர்கள் வருகை தந்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்