English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Jun, 2022 | 10:05 pm
Colombo (News 1st) கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான கோட்டாபய ராஜபக்ஸ, தாம் அமெரிக்க பிரஜாவுரிமையை நீக்கிக்கொண்டமைக்கான சான்றிதழை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கவில்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் அப்போதைய உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூல் தெரிவித்துள்ளார்.
நாகானந்த கொடித்துவக்கு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் பிரதிவாதியான அவர், சத்தியக் கடதாசி மூலம் இன்று நீதிமன்றத்தில் இதனை அறிவித்தார்.
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் அப்போதைய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் செயற்பட்ட விதம் காரணமாக சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை நடத்த முடியாமற்போனதாக தெரிவித்து நாகானந்த கொடித்துவக்கு உயர் நீதிமன்றத்தில் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனு எதிர்வரும் 30 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்த மனுவில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டுள்ள பேராசிரியர் ரட்ணஜீவன் ஹுல் இரண்டாவது தடவையாக நீதிமன்றத்தில் சத்தியக் கடதாசியொன்றை சமர்ப்பித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் சட்டம் , அரசியலமைப்பிற்கு அமைவாக அனைத்து வேட்பாளர்களும் தாம் அவ்வாறு போட்டியிடுவதற்கு தகுதியற்றவர் அல்லவென உறுதியளிக்க வேண்டும் என தமது சத்தியக் கடதாசியில் அவர் தெரிவித்துள்ளார்.
20 Jul, 2022 | 09:42 PM
14 Jul, 2022 | 09:11 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS