துப்பாக்கிச்சூட்டில் 42 வயதான நபர் கொலை

மெனிங் சந்தையில் துப்பாக்கிச்சூடு; 42 வயதான நபர் கொலை

by Staff Writer 21-06-2022 | 4:21 PM
Colombo (News 1st) பேலியகொடை - மெனிங் சந்தை பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காரில் சென்ற ஒருவரால் துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். கொழும்பு - கொட்டாஞ்சேனையை சேர்ந்த 42 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று பகல் 1.30 அளவில் இந்த துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.