முத்துராஜவெலயில் மின்சார சபைக்கு காணி வழங்க அனுமதி

முத்துராஜவெலயில் 10 ஏக்கர் காணியை மின்சார சபைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி

by Staff Writer 21-06-2022 | 3:48 PM
Colombo (News 1st) முத்துராஜவெலயில் 10 ஏக்கர் காணியை இலங்கை மின்சார சபைக்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. யுகதனவி மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக இந்த காணி வழங்கப்படவுள்ளது. 300 மெகாவாட் LNG மின்சார உற்பத்தியை மேற்கொள்வதற்கான நிலையமொன்றை குறித்த காணியில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.