English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Jun, 2022 | 3:31 pm
Colombo (News 1st) முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு, உடையார்கட்டு பகுதியில் புதைக்கப்பட்டிருந்த நிலையில், மண்ணெண்ணெய் பீப்பாய்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
காணியை துப்பரவு செய்தபோது பீப்பாய்கள் இருந்ததைக் கண்ட நில உரிமையாளர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
கடந்த மாதம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு, முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி T.சரவணராஜா முன்னிலையில் நேற்றைய தினம் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, 7 மண்ணெண்ணெய் பீப்பாய்கள் தோண்டியெடுக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் மண்ணெண்ணெய் இருக்கின்றமை உறுதி செய்யப்பட்டது.
715 லிட்டர் மண்ணெண்ணெய் பீப்பாய்களில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அவை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் ஒப்படைக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.
யுத்த காலத்தில் இந்த பீப்பாய்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
06 Jul, 2022 | 02:40 PM
19 Mar, 2022 | 06:03 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS