by Staff Writer 16-06-2022 | 5:26 PM
Colombo (News 1st) இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க உள்ளதாக அமெரிக்கா இன்று அறிவித்துள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்க்கப்படும் நிதி திட்டத்திற்காக, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த இலங்கைக்கு உதவும் வகையில் அமெரிக்கா இந்த நிதியுதவியை வழங்குகிறது.
பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள இலங்கை மக்களுக்கு அமெரிக்கா உதவும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் Julie Chung தெரிவித்துள்ளார்.
வளர்ச்சிக்கான நீண்டகால பங்காளி என்ற வகையில், நிலையான பொருளாதார வளர்ச்சி மற்றும் சிறந்த நிர்வாகத்தை ஊக்குவிக்கும் முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.