BIMSTEC அலுவலகத்தை கொழும்பில் அமைக்க அனுமதி

BIMSTEC-இன் தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற நிலையத்தை கொழும்பில் அமைக்க இந்தியா அனுமதி

by Staff Writer 15-06-2022 | 5:31 PM
Colombo (News 1st) கொழும்பில் BIMSTEC அமைப்பின் தகவல் தொழில்நுட்ப பரிமாற்ற நிலையத்தை அமைக்க இந்திய மத்திய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. BIMSTEC எனப்படுகின்ற பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பிற்கான வங்காள விரிகுடா நாடுகளின் ஐந்தாவது மாநாடு கடந்த மார்ச் மாதம் இலங்கையில் நடைபெற்றிருந்தது. BIMSTEC அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைகளில் தொழில்நுட்ப பரிமாற்றங்களை மேற்கொள்வதற்கான நிலையமொன்றை ஏற்படுத்துவதற்கான உடன்படிக்கை இதன்போது கைச்சாத்திடப்பட்டது. இந்த தொழில்நுட்ப பரிமாற்ற நிலையத்தை இலங்கையில் ஸ்தாபிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.