கம்பஹாவின் சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் 16 மணி நேர நீர்வெட்டு

by Staff Writer 15-06-2022 | 12:07 PM
Colombo (News 1st) கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் இன்று(15) 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அதனடிப்படையில், இன்று(15) பிற்பகல் 02 மணி முதல் நாளை(16) காலை 06 மணி வரை 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. கம்பஹா மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகள், மிரிஸ்வத்தை சந்தி தொடக்கம் அளுத்கம, போகமுவ தேவாலய வீதி வரையான பகுதிகளிலும் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.