எரிபொருள் நெருக்கடி: காலி வீதியை மறித்து மக்கள் போராட்டம்

எரிபொருள் நெருக்கடி: காலி வீதியை மறித்து மக்கள் போராட்டம்

எரிபொருள் நெருக்கடி: காலி வீதியை மறித்து மக்கள் போராட்டம்

எழுத்தாளர் Staff Writer

15 Jun, 2022 | 11:15 am

Colombo (News 1st) எரிபொருள் கோரி தெஹிவளை பிரதேசத்தில் காலி வீதியை மறித்து மக்கள் இன்று(15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக காலி வீதி ஊடாக கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதனிடையே, எரிபொருள் கோரி பஞ்சிகாவத்தை பகுதியிலும் வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து வருகின்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்