வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை

வத்தளையில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கொலை

by Staff Writer 14-06-2022 | 1:35 PM
Colombo (News 1st) வத்தளை - எலகந்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளொன்றில் பயணித்த ஒருவரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு - 15,  மட்டக்குளி, அலிவத்த பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞரே உயிரிழந்துள்ளார். சடலம் ராகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. T-56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. திட்டமிட்ட குற்றச்செயலில் ஈடுபடும் இரு குழுக்களிடையே போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் ஏற்பட்ட மோதல் வலுப்பெற்றமையால் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். சந்தேகநபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.