மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சர் உரை

மனித உரிமைகள் பேரவையில் வௌிவிவகார அமைச்சர் விசேட உரை

by Staff Writer 13-06-2022 | 4:48 PM
Colombo (News 1st) வௌிவிவகார அமைச்சர், பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், இன்று(13) ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் விசேட உரை ஆற்றவுள்ளார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையுடன் இலங்கை தொடர்ச்சியாக இணைந்து செயலாற்றும் வகையில் வௌிவிவகார அமைச்சரின் உரை அமையவுள்ளது. இன்று(13) ஆரம்பமாகும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 08ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது. கூட்டத்தொடரில் பங்குபற்றும் இலங்கை தூதுக்குழுவுக்கு வௌிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தலைமை தாங்குகின்றார்.