English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
12 Jun, 2022 | 2:59 pm
Colombo (News 1st) ரம்புக்கனை ரயில் நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலொன்றின் பெட்டியிலிருந்து தூக்கில் தொங்கிய நிலையில் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவர் இதுவரை அடையாளங்காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று(12) அதிகாலை 4.40 மணியளவில் ரம்புக்கனை ரயில் நிலையத்திலிருந்து ரயில் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர், சாரதியின் உதவியாளர், ரயிலை சோதனை செய்த போதே சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
60 வயது மதிக்கத்தக்க ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரிடமிருந்து பொல்கஹவெல தொடக்கம் பண்டாரவளை வரைக்குமான ரயில் பயணச்சீட்டும் கைப்பற்றப்பட்டுள்ளது.
சடலம் மீதான பிரேத பரிசோதனைகள் இன்று(12) இடம்பெறவுள்ளன.
29 Apr, 2022 | 03:59 PM
22 Apr, 2022 | 08:34 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS