பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து இளைஞரின் சடலம் மீட்பு

எழுத்தாளர் Staff Writer

12 Jun, 2022 | 5:39 pm

Colombo (News 1st) மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி, பட்டிருப்பு பாலத்திற்கு அருகிலிருந்து இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பகுதியைச் சேர்ந்த 25 – 30 வயதுக்கு இடைப்பட்ட வயதான ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் செலுத்திச்சென்ற சைக்கிளும் அதே இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

களுவாஞ்சிக்குடி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்