திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க திட்டம் 

திரிபோஷா உற்பத்தியை மீள ஆரம்பிக்க உலக உணவுத் திட்டம் நிதியுதவி

by Staff Writer 11-06-2022 | 3:37 PM
Colombo (News 1st) நாட்டில் திரிபோஷா உற்பத்தியை மீளவும் ஆரம்பிப்பதற்கான நிதியுதவியை வழங்க உலக உணவுத் திட்டம் இணக்கம் தெரிவித்துள்ளது. உலக உணவுத் திட்ட அமைப்பின் இலங்கைக்கான பிரதிநிதிகள் குழுவுடன் நடைபெற்ற கலந்துரையாடல் வெற்றிபெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த குறிப்பிட்டார். இதனடிப்படையில், திரிபோஷா உற்பத்திக்கு தேவையான சோளம் உள்ளிட்ட மூலப்பொருட்களை விரைவில் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மூலப்பொருட்களுக்கான தட்டுப்பாடு காரணமாகவே திரிபோஷா உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.