அமரகீர்த்தி அத்துகோரள கொலை: இதுவரை 31 பேர் கைது

அமரகீர்த்தி அத்துகோரள கொலை: இதுவரை 31 பேர் கைது

by Staff Writer 11-06-2022 | 3:51 PM
Colombo (News 1st) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலை தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 9 ஆம் திகதி நிட்டம்புவ பகுதியில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் அவரின் மெய்ப்பாதுகாவலரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கொலை தொடர்பில் நேற்றைய தினமும் 24 வயதான இளைஞர் நிட்டம்புவ பகுதியில் கைது செய்யப்பட்டார். இதுவரை 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 30 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.