மன்னார் – நொச்சிக்குளத்தில் சகோதரர்கள் இருவர் கொலை; சந்தேகநபர்கள் தலைமறைவு

மன்னார் – நொச்சிக்குளத்தில் சகோதரர்கள் இருவர் கொலை; சந்தேகநபர்கள் தலைமறைவு

மன்னார் – நொச்சிக்குளத்தில் சகோதரர்கள் இருவர் கொலை; சந்தேகநபர்கள் தலைமறைவு

எழுத்தாளர் Staff Writer

11 Jun, 2022 | 3:45 pm

Colombo (News 1st) மன்னார் – உயிலங்குளம், நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனினும், சந்தேகநபர்கள் அனைவரும் தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

கொலை செய்யப்பட்ட இருவரின் சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். போதனா வைத்தியசாலையில் இன்று பிரேத பரிசோதனை நடத்தப்படவுள்ளது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலுப்பெற்றதையடுத்து, நேற்று (10) முற்பகல் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்