இலங்கையரிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை

அகதி அந்தஸ்திற்காக பொய் கூறிய இலங்கையரிடம் இந்திய உளவுத்துறை அதிகாரிகள் விசாரணை

by Staff Writer 10-06-2022 | 10:34 PM
Colombo (News 1st) விமானம் மூலம் இந்தியாவிற்கு சென்ற இலங்கையர் ஒருவர் தன்னை அகதியாக பதிவு செய்துகொள்ளும் நோக்கில், படகில் வந்ததாகக் கூறி ஏமாற்றியுள்ளமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. திருகோணமலையை சேர்ந்த ஒருவர் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தான் படகு மூலம் தமிழகத்திற்கு அகதியாக வருகை தந்ததாக தெரிவித்து தனுஷ்கோடி கடற்கரையில் நின்றுள்ளார். தனுஷ்கோடி மீனவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், அவரை மீட்ட கரையோரப் பிரிவு பொலிஸார், மண்டபம் கரையோர காவல் நிலையத்தில் விசாரணைகளை முன்னெடுத்தனர். நேற்று (09) காலை கொழும்பிலிருந்து விமானம் மூலமாக சென்னை சென்று பின்னர் அங்கிருந்து பஸ் மூலமாக இராமேஸ்வரம் சென்று தனுஷ்கோடிக்கு சென்றுள்ளமையை விசாரணைகளில் அந்நபர் ஒத்துக்கொண்டுள்ளார். படகில் வந்ததாக தெரிவித்தால் அகதி அந்தஸ்து கிடைக்கும் என்ற நோக்கில் அவர் அவ்வாறு செயற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் உளவுத்துறை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.