யாழ்ப்பாணத்தில் ரயிலுடன் கார் மோதி விபத்து; இருவர் பலி 

யாழ்ப்பாணத்தில் ரயிலுடன் கார் மோதி விபத்து; இருவர் பலி 

யாழ்ப்பாணத்தில் ரயிலுடன் கார் மோதி விபத்து; இருவர் பலி 

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2022 | 3:06 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – அரியாலை, புங்கன்குளம் பகுதியில் ரயிலுடன் கா​ர் மோதி விபத்திற்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயிலில் கார் மோதியுள்ளது.

விபத்து காரணமாக சில மணித்தியாலங்களுக்கு ரயில் போக்குவரத்தும் தடைப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த யாழ்ப்பாண பொலிஸார் மீட்பு பணிகளை மேற்கொண்டனர்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ரயில் கடவையில் சமிக்ஞை செயற்பட்டாலும் பாதுகாப்பு கடவையொன்று இல்லையென நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்