மன்னார் – நொச்சிக்குளத்தில் இருவர் தாக்கி கொலை

மன்னார் – நொச்சிக்குளத்தில் இருவர் தாக்கி கொலை

எழுத்தாளர் Staff Writer

10 Jun, 2022 | 4:43 pm

​Colombo (News 1st) மன்னார் – உயிலங்குளம், நொச்சிக்குளம் பகுதியில் இருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறு வலுப்பெற்றதையடுத்து, இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

33 மற்றும் 42 வயதான சகோதரர்கள் இருவரே கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சடலங்கள் மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

உயிலங்குளம் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்