அரிசியை இறக்குமதி செய்யுமாறு அமைச்சு வலியுறுத்தல்

4 மாதங்களுக்கான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு அறிவுறுத்தல்

by Staff Writer 09-06-2022 | 8:01 AM
Colombo (News 1st) அடுத்த 4 மாதங்களுக்கு தேவையான அரிசியை இறக்குமதி செய்யுமாறு விவசாய அமைச்சு, வர்த்தக அமைச்சுக்கு அறிவித்துள்ளது. எதிர்வரும் செப்டம்பர் மாதம் வரை மாத்திரமே அரிசி கையிருப்பு உள்ளதாக விவசாய பணிப்பாளர் நாயகம், கலாநிதி அஜந்த டி சில்வா தெரிவித்துள்ளார். நாட்டில் நுகர்விற்கு தேவையான அரிசியின் அளவு மாதாந்தம் 2 இலட்சம் மெட்ரிக் தொன் ஆகும். இதற்கு முன்னர் 3 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாக விவசாய பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.