தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை 

மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு நீதிமன்றம் தடை

by Staff Writer 09-06-2022 | 3:40 PM
Colombo (News 1st) தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக பொதுமக்களுக்கான மின் விநியோகம் தொடர்ச்சியாக தடைப்படுவதை கருத்திற்கொண்டு, இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மாவட்ட நீதிபதி பூர்ணிமா பரனகம இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.