கல்பொத்தேகம பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி 

மக்கள் சக்தியினால் கல்பொத்தேகம பாடசாலைக்கு பாதுகாப்பு வேலி 

by Staff Writer 09-06-2022 | 8:52 AM
Colombo (News 1st) மக்கள் சக்தி திட்டத்தின் ஊடாக அனுராதபுரம் கல்பொத்தேகம பாடசாலைக்கான பாதுகாப்பு வேலி மற்றும் விளையாட்டு மைதானம் அமைக்கும் பணிகள் இன்று(09) ஆரம்பிக்கப்படவுள்ளன. 67 மாணவர்களைக் கொண்ட அனுராதபுரம் - கல்கடவல கல்பொத்தேகம பாடசாலைக்கான வசதிகள் மிகவும் குறைந்த மட்டத்திலேயே உள்ளது. பாடசாலையை சூழ பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தினால் கால்நடைகள் மற்றும் இதர விலங்குகள் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதாக பாடசாலை சமூகத்தினர் தெரிவிக்கின்றனர். பாடசாலை மாணவர்களுக்கான விளையாட்டு மைதானம் புனரமைக்கப்படாமல் பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. அதனடிப்படையில், பாடசாலைக்கான பாதுகாப்பு வேலி அமைக்கும் பணிகள் மற்றும் விளையாட்டு மைதானத்தை புனரமைக்கும் பணிகள் இன்று(09) மக்கள் சக்தியூடாக ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்காக ஸ்ரீயந்த சேனாரத்ன தம்பதியினர் நிதி பங்களிப்பு வழங்குகின்றனர்.