English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Jun, 2022 | 4:55 pm
Colombo (News 1st) மக்கள் தன்னெழுச்சி போராட்டமான கோட்டாகோகம மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என தெரிவித்து பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 9 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம அறவழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் வலுப்பெற்றது.
போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்கள் இன்று கொழும்பு கோட்டையில் இருந்து பொலிஸ் தலைமையகம் வரை பேரணி முன்னெடுத்தனர்.
பொலிஸ் தலைமையகத்திற்கு முன்னால் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கும் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
கோட்டாகோகம தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஒரு மாதம் நிறைவுபெறுவதை முன்னிட்டு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தை கலைப்பதற்காக ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அவர்கள் பொலிஸ் தலைமையகத்தில் இருந்து கோட்டாகோகம போராட்டக்களத்தை நோக்கி சென்றனர்.
09 Jul, 2022 | 01:59 PM
22 Jun, 2022 | 03:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS