சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சார விநியோகம் உள்ளிட்ட சில சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

by Staff Writer 08-06-2022 | 10:39 PM
Colombo (News 1st) மின்சார விநியோகம் உள்ளிட்ட மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அதிவிசேட வர்த்தமானியொன்றை வௌியிட்டுள்ளார். குறித்த வர்த்தமானிக்கு அமைய வைத்தியசாலைகள், மருத்துவ நிலையங்கள் மற்றும் அதற்கு நிகரான நிறுவனங்களில் நோயாளர்கள் பராமரிப்பு, பாதுகாப்பு, போஷாக்கு வழங்குதல், சிகிச்சையளித்தல் உள்ளிட்ட சேவைகள் அனைத்தும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளன.