6 நாட்களுக்கு விநியோகிக்க முடியும் - லிட்ரோ

மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது

by Staff Writer 08-06-2022 | 8:59 AM
Colombo (News 1st) 3,900 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிய மற்றுமொரு கப்பல் நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. மீதமுள்ள 2.5 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்தி எரிவாயுவை இன்று(08) தரையிறக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதனூடாக மேலும் 6 நாட்களுக்கு தொடர்ச்சியாக எரிவாயுவை விநியோகிக்க முடியும் என லிட்ரோ நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.