பிரதமர் - IMF முகாமைத்துவ பணிப்பாளர் இடையே பேச்சு

பிரதமர் - IMF முகாமைத்துவ பணிப்பாளர் இடையில் கலந்துரையாடல்

by Staff Writer 08-06-2022 | 2:23 PM
Colombo (News 1st) பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சர்வதேச நாணய நிதியத்தின்(IMF) முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுடன்(Kristalina Georgieva) நேற்று(07) கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் மட்ட குழுவை விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் இதன்போது அதிகாரிகள் மட்டத்திலான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட முடியும் என பிரதமர் இதன்போது கூறியுள்ளார். இந்த கடினமான சூழலில், இலங்கைக்கு உதவுவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் விருப்பம் தெரிவித்ததாக பிரதமரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.