பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணத்தில் பசில் ராஜபக்ஸ 

பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணத்தில் பசில் ராஜபக்ஸ 

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2022 | 5:04 pm

Colombo (News 1st) பசில் ராஜபக்ஸ நாளை (09) தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யும் எண்ணத்தில் இருப்பதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் நியூஸ்ஃபெஸ்டிற்கு தெரிவித்தார்.

பசில் ராஜபக்ஸ நாளைய தினம் தனது தீர்மானத்தை அறிவிப்பார் என அவர் கூறினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதன் பின்னர் கட்சியை வழிநடத்தும் பணியில் முழு நேரமாக அவர் ஈடுபடவுள்ளதாகவும் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, நாளை முற்பகல் 11 மணிக்கு பசில் ராஜபக்ஸ ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தவுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்