ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவு

எழுத்தாளர் Staff Writer

08 Jun, 2022 | 5:12 pm

Colombo (News 1st) முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு கோட்டை நீதவான் இன்று உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி கோட்டாகோகம மற்றும் மைனாகோகம ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் சந்தேகநபராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பெயரிடப்பட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க உள்ளிட்ட 13 சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினரான சனத் நிஷாந்த உள்ளிட்ட 04 சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்