by Staff Writer 07-06-2022 | 9:03 AM
Colombo (News 1st) இம்முறை சிறுபோகத்தில் 250,000 ஹெக்டேயர் வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் 120,000 ஹெக்டேயரிலும் நெற்செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வயல்களிலும் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், நெற்செய்கையை ஆரம்பித்துள்ள விவசாயிகளுக்கு தேவையான பசளை இதுவரை விநியோகிக்கப்படவில்லை.