250,000 ஹெக்டேயரில் நெற்செய்கை

250,000 ஹெக்டேயரில் நெற்செய்கை

250,000 ஹெக்டேயரில் நெற்செய்கை

எழுத்தாளர் Staff Writer

07 Jun, 2022 | 9:03 am

Colombo (News 1st) இம்முறை சிறுபோகத்தில் 250,000 ஹெக்டேயர் வயல் காணிகளில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 120,000 ஹெக்டேயரிலும் நெற்செய்கையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் செயலாளர் ரோஹண புஷ்பகுமார குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வயல்களிலும் நெற்செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், நெற்செய்கையை ஆரம்பித்துள்ள விவசாயிகளுக்கு தேவையான பசளை இதுவரை விநியோகிக்கப்படவில்லை.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்