மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது

மற்றுமொரு எரிவாயு கப்பல் நாட்டை வந்தடைந்தது

by Staff Writer 07-06-2022 | 7:19 AM
Colombo (News 1st) 2,000 மெட்ரிக் தொன் எரிவாயுவுடனான மற்றுமொரு கப்பல் நேற்று(06) நாட்டை வந்தடைந்துள்ளது. கப்பலிலிருந்து இன்று(07) எரிவாயு இறக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். நாளை மறுதினம்(09) முதல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படும் என அவர் கூறியுள்ளார். இதனிடையே, இன்றைய தினம்(07) மேல் மாகாணத்தில் விசேட விநியோகத்தை முன்னெடுக்கவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. எரிவாயு விநியோகிக்கப்படும் விற்பனை நிலையங்கள்…