போரிஸ்ஜோன்சன் மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

போரிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

by Staff Writer 07-06-2022 | 8:20 AM
Colombo (News 1st) பிரித்தானிய பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்பட்டுள்ளது. போரிஸ் ஜோன்சனின் தலைமைத்துவத்திற்கு எதிராக இந்த நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு நேற்று(06) இடம்பெற்றது. இதன்போது, பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு ஆதரவாக 59 வீத வாக்குகள் வழங்கப்பட்டன. 211 பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாகவும் 148 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதற்கமைய, பிரதமர் போரிஸ் ஜோன்சனுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.