நிமல் சிறிபால டி சில்வாவை நீக்க நீதிமன்றம் தடை

சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து நிமல் சிறிபால டி சில்வாவை நீக்க நீதிமன்றம் தடை

by Staff Writer 07-06-2022 | 7:02 PM
Colombo (News 1st) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் வகித்த பதவிகளில் இருந்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீக்குவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இம்மாதம் 20 ஆம் திகதி வரை இந்த தடையுத்தரவு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த பின்னர் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.