51 சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

ஏப்ரல் 21 தாக்குதல்: 51 சந்தேகநபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிப்பு

by Staff Writer 07-06-2022 | 5:26 PM
Colombo (News 1st) ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 51 பேரின் விளக்கமறியல் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விசாரணை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, சந்தேகநபர்களை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் ஏ.பீட்டர் போல் உத்தரவிட்டார். ஏப்ரல் 21 தாக்குதலின் போது சஹ்ரானுடன் தொடர்புகளை பேணியமைக்காகவும் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா உள்ளிட்ட இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றமைக்காகவும் சந்தேகத்தின் அடிப்படையில் காத்தான்குடியை சேர்ந்த சஹ்ரானின் சகோதரி, அவரது கணவர் உள்ளிட்ட 69 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இதில் 11 பேருக்கு ஏற்கனவே பிணை வழங்கப்பட்டிருந்தது. எஞ்சிய 51 சந்தேகநபர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான் ஏ.பீட்டர் போல் இன்று உத்தரவிட்டார்.

ஏனைய செய்திகள்