நீர்வீழ்ச்சியில் காணாமற்போன சிறுவனின் சடலம் மீட்பு

அமுனுவல நீர்வீழ்ச்சியில் காணாமற்போன சிறுவனின் சடலம் மீட்பு 

by Staff Writer 07-06-2022 | 4:35 PM
Colombo (News 1st) புசல்லாவை - உடகம, அமுனுவல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்சென்று காணாமற்போன சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று முற்பகல் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். மீட்கப்பட்ட சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கம்பளை - நவோதவிட்ட பகுதியை சேர்ந்த 16 வயதான சிறுவனொருவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். தனது நண்பருடன் நேற்று (06) மாலை குளிக்கச்சென்றிருந்த சிறுவனே நீரில் அடித்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். பாதுகாப்பற்ற பகுதியில் இருவரும் குளிக்கச்சென்ற போது, ஒருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளதுடன், மற்றுமொருவர் தப்பிச்சென்றுள்ளார். சம்பவம் தொடர்பில் புசல்லாவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏனைய செய்திகள்