அஜித் நிவாட் கப்ராலுக்கு பிணை

by Staff Writer 07-06-2022 | 12:59 PM
Colombo (News 1st) இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலை 10 மில்லியன் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ய கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று(07) உத்தரவிட்டது. அரசுக்கு சொந்தமான 6.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி குறித்து நம்பிக்கையை சீர்குலைத்தமை தொடர்பான முறைப்பாட்டுக்கான விசாரணைக்காக அஜித் நிவாட் கப்ரால் மன்றில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் இந்த பிணை வழங்கப்பட்டுள்ளது.