அலம்பல் பகுதியில் ஒருவர் தாக்கி கொலை

அலம்பல் பகுதியில் ஒருவர் தாக்கி கொலை

by Staff Writer 07-06-2022 | 11:30 AM
Colombo (News 1st) முல்லைத்தீவு - அலம்பில் பகுதியில் நேற்றிரவு(06) ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறின் போது இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர். அலம்பில் தெற்கு பகுதியை சேர்ந்த 42 வயதான ஒருவரே இதன்போது கொலை செய்யப்பட்டுள்ளார். சடலம் மீதான நீதவான் விசாரணை இன்று(07) இடம்பெறவுள்ளது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.