Aeroflot விமானத்தை மொஸ்கோ நோக்கி அனுப்ப நடவடிக்கை

Aeroflot விமானத்தை மொஸ்கோ நோக்கி அனுப்ப நடவடிக்கை

by Staff Writer 06-06-2022 | 4:38 PM
Colombo (News 1st) ரஷ்யாவின் Aeroflot விமானத்தை (SU289) இன்று(06) மாலை 06 மணிக்கு முன்னர் மொஸ்கோ நோக்கி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் Aeroflot விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்று, இலங்கையிலிருந்து வௌியேறுவதற்கு தடை விதித்து பிறப்பித்த உத்தரவை கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றம் இடைநிறுத்தியதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொழும்பு வர்த்தக மேல் நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் நகர்த்தல் பத்திரமொன்றை முன்வைத்து விடுத்த வேண்டுகோளை கருத்திற்கொண்டு நீதிமன்றம் இந்த தடை உத்தரவினை இடைநிறுத்தியிருந்தது.