மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

by Staff Writer 06-06-2022 | 3:14 PM
Colombo(News 1st) இன்று(06) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நாளாந்த மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, இன்று(06) முதல் எதிர்வரும் 10ஆம் திகதி வரை நாளொன்றில் 2 மணித்தியாலங்கள் 15 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. எதிர்வரும் ஜூன் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் ஒரு மணித்தியாலத்திற்கு மாத்திரமே மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதனிடையே, மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை இன்று(06) அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்சார சபையின் நஷ்டத்தை குறைக்கும் நோக்கில் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக மின்சார சபையின் தலைவர் M.M.C. பெர்டினாண்டோ குறிப்பிட்டுள்ளார்.