சுங்க திணைக்களத்தால் இந்திய பிரஜை கைது

கனேடிய டொலர்களை கொண்டுசெல்ல முயன்ற இந்திய பிரஜை கைது

by Staff Writer 05-06-2022 | 5:22 PM
Colombo (News 1st) 117,000 கனேடிய டொலர் மற்றும் 19,000 யூரோவை பயணப் பொதிக்குள் கொண்டுசெல்ல முயன்ற இந்தியப் பிரஜை ஒருவர் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார். சென்னை நோக்கி பயணிக்கவிருந்த நிலையிலேயே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.