யாழ். போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய இந்திய அரசாங்கம்

யாழ். போதனா வைத்தியசாலைக்கு உயிர்காக்கும் மருந்துகளை வழங்கிய இந்திய அரசாங்கம்

எழுத்தாளர் Staff Writer

05 Jun, 2022 | 4:47 pm

Colombo (News 1st) யாழ். போதனா வைத்தியசாலைக்கு தேவையான உயிர்காக்கும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை இந்திய அரசாங்கம் வழங்கி வைத்துள்ளது.

இரு வாகனங்களில் கொண்டுவரப்பட்ட இந்த மருந்துப் பொருட்களை யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமாரிடம் வழங்கி வைத்தார்.

நாட்டில் மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்ற நிலையில் யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் இந்திய துணை தூதுவரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய இந்த மருந்துப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்