சீனாவிலிருந்து மருந்துப் பொருட்கள் வந்தடைந்தன

சீனாவிலிருந்து ஒரு தொகுதி அத்தியாவசிய மருந்துப் பொருட்கள் நாட்டை வந்தடைந்தன

by Staff Writer 04-06-2022 | 3:52 PM
Colombo (News 1st) சீன அரசாங்கத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மருந்தும் சத்திர சிகிச்சைக்கான உபகரணங்களின் ஒரு தொகுதியும் நேற்றிரவு நாட்டை வந்தடைந்தன. இவற்றில் 14 அத்தியாவசிய மருந்து வகைகளும் அடங்குகின்றன. இந்த மருந்துப்பொருட்கள் சீன அரசு மற்றும் அந்நாட்டின் பௌத்த அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகளால் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. சீன அரசாங்கத்தினால் வழங்கப்படும் மருந்துப்பொருட்களின் மற்றுமொரு தொகுதி, இந்த மாதத்திற்குள்ளேயே நாட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளதுடன், அதன் பெறுமதி 28 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகமாகும்.