பேசாலை மீனவர்கள் மீது தாக்குதல்; இலங்கை கடற்படை மீது குற்றச்சாட்டு

by Bella Dalima 03-06-2022 | 10:41 PM
Colombo (News 1st) தலைமன்னாரில் தாக்குதலுக்கு இலக்கான 7 மீனவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான மீனவர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர். தலைமன்னாரில் இலங்கை கடற்படையினரால் நேற்று தாம் தாக்கப்பட்டதாக வைத்தியசாலையிலுள்ள மீனவர்கள் பொலிஸாரிடம் கூறியுள்ளனர். பேசாலையை சேர்ந்த மீனவர்களே தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் தலைமன்னார் பொலிஸாருக்கு அறிவிக்கவுள்ளதாக பேசாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். இந்த விடயம் குறித்து இலங்கை கடற்படையினரிடம் வினவியபோது, தாக்குதல் சம்பவம் குறித்து இதுவரை எவ்வித தகவல்களும் கடற்படை தலைமையகத்திற்கு பதிவாகவில்லை என கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா குறிப்பிட்டார். எனினும், இது குறித்து தாம்ஆராய்வதாகவும் அவர் தெரிவித்தார்.

ஏனைய செய்திகள்