மல்வானை காணி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஸவும் திருக்குமார் நடேசனும் விடுதலை

மல்வானை காணி வழக்கிலிருந்து பசில் ராஜபக்ஸவும் திருக்குமார் நடேசனும் விடுதலை

எழுத்தாளர் Staff Writer

03 Jun, 2022 | 4:15 pm

Colombo (News 1st) மல்வானை காணி விவகாரம் தொடர்பான வழக்கிலிருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸவும் வர்த்தகரான திருக்குமார் நடேசனும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர, பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கை தொடர்ந்தும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மல்வானை பகுதியில் 16 ஏக்கருக்கும் அதிக காணியை பெற்று சொகுசு வீடு மற்றும் நீச்சல் தடாகம் அமைத்தமையூடாக அரச நிதியை முறையற்ற வகையில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ, திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக சட்ட மா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்