வாள்வெட்டில் முடிந்த வாய்த்தர்க்கம்

வாள்வெட்டில் முடிந்த வாய்த்தர்க்கம்

by Staff Writer 02-06-2022 | 1:55 PM
Colombo (News 1st) வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது. பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்று(01) பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மதுபோதையில் குழுக்களிடையே ஏற்பட்ட தகராறே வாள்வெட்டிற்கான காரணம் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.