ஒரே நாடு - ஒரே சட்டம் செயலணி: பதவிக்காலம் நீடிப்பு

ஒரே நாடு - ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் நீடிப்பு

by Staff Writer 02-06-2022 | 8:40 AM
Colombo (News 1st) ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் மேலும் 3 வாரங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் ஆலோசனைக்கு அமைய, ஜனாதிபதி செயலாளரினால் வௌியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியினூடாக செயலணியின் பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ஒரே நாடு - ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் பதவிக்காலம் கடந்த 27ஆம் திகதி நிறைவடைந்தது. அதற்கமைய, செயலணியின் பதவிக்காலத்தை மேலும் 3 வாரங்களுக்கு நீடித்து அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.