வாள்வெட்டில் முடிந்த வாய்த்தர்க்கம்

வாள்வெட்டில் முடிந்த வாய்த்தர்க்கம்

by Staff Writer 02-06-2022 | 1:55 PM
Colombo (News 1st) வடமராட்சி பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 06 பேர் காயமடைந்துள்ளனர். வடமராட்சி, பருத்தித்துறை பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வாள்வெட்டு தாக்குதலில் முடிவடைந்துள்ளது. பருத்தித்துறை சுப்பர் மடம் பகுதியில் நேற்று(01) பிற்பகல் 2 மணியளவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. மதுபோதையில் குழுக்களிடையே ஏற்பட்ட தகராறே வாள்வெட்டிற்கான காரணம் என பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்த 06 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பருத்தித்துறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

ஏனைய செய்திகள்