ஜனாதிபதியினால் ஆணைக்குழு நியமனம்

மார்ச் 31 முதல் மே 15 வரை இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரிக்க ஜனாதிபதியினால் ஆணைக்குழு நியமனம்

by Staff Writer 01-06-2022 | 8:16 PM
Colombo (News 1st) கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதியில் இருந்து மே மாதம் 15 ஆம் திகதி வரையான காலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தீ வைப்பு சம்பவங்கள், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் ஆட்கொலை சம்பவம் தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஜனாதிபதியினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற நீதியரசரான ஜனாதிபதி சட்டத்தரணி P.B.அலுவிஹாரே இந்த ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் S.M. விக்ரமசிங்க, மேலதிக பிரதம மதிப்பீட்டாளர் N.A.S.வசந்த குமார ஆகியோரும் ஆணைக்குழுவில் அங்கம் வகிக்கின்றனர். ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் புவனேக ஹேரத் ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.